பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 31 octobre 2014

தமிழர் பழக்கவழக்கங்கள் - விளக்கம்


நெற்றியில் பொட்டு:
பெண்கள் நெற்றியில் குங்குமம் அல்லது பொட்டு வைப்பது தமிழர் மரபாகும். நெற்றியில் இரண்டு புருவங்களுக்கும் நடுவிலுள்ள புள்ளி
'அஜ்னா சக்கரம்' என்றும்  விழிப்புணர்வுப்  புள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாகவே தூண்டப்பட்டு ஒருவரின் பதற்றத்தைக்  குறைத்து மனத்தை அமைதிப்படுத்துகிறது.

மெட்டி:
 திருமணமான இந்துப்  பெண்கள் மெட்டி அணிவது  வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை.  பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாகச்  செல்கிறது.மெட்டி அணிந்து  நடக்கும்போது இந்த நரம்பு அழுத்தப்படுகிறது. இதனால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தைச்  சீராக்குகிறது . .
வணக்கம் :
 இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவை ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்படத்  தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்கச்  செய்யும்.

தரையில் அமர்ந்து உண்ணுவது :
 சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து  சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கிச்  சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு சீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு சீ ரணம் நன்றாக நடைபெறுகிறது.

விளக்கேற்றும் நிகழ்வு:
திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையும் பொண்ணுமாக மணமகன் வீட்டுக்கு வரும்போது ஆரத்தி எடுத்ததும் வலக்  காலை எடுத்துவைத்து உள்ளே வருகின்ற மணமகளை நேரே பூசை  அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைப்பார்கள். எங்கோ பிறந்து, வளர்ந்து  வேறொரு வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வருகின்ற மணமகளானவள் தன்னிடமுள்ள நல்ல குணாதிசயங்களைக் கூறாமல் கூறுகின்ற பாவனையாகவே இந்த விளக்கேற்றும் நிகழ்வு முற்காலத்தில் தொடங்கி  வைக்கப்பட்டது. அதாவது வீட்டுக்கு வருகின்ற மணமகளானவள் ஐந்து முகங்களைக் கொண்ட குத்துவிளக்கை ஏற்றுவதன் மூலமாக பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை, சமயோசிதபுத்தி, நல்ல விடயங்களில் வைராக்கியம் போன்ற ஐந்து நற்குணங்களுடன் இந்த வீட்டுக்கு வாழ   வந்திருப்பதைக்  குறிக்கிறது.

ஆரத்தி :
திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர், குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய், தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர் முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது. 

  ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை இந்த  சூட்சுமப்  பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போவார்கள். அதனால்தான் திருஷ்டி  கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டிவிடுவது வழக்கம்..

ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள்,குங்குமம், வெற்றிலை, கற்பூரம்,நீர்.ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும்போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்றுவிடும்.இதனை நீர்வலம் விடுதல் என்றும் கூறுவர் ..
தொகுப்பு:
லூசியா லெபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire