பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 30 septembre 2014

அமைதிக்கு ஆன்றோர் அளித்த அறநெறிகள் .


 • வெற்றி என்பது தோல்விகளுக்கிடையேதான் இருக்கிறது.
 - அப்துல் கலாம்

 • பிழையைச் சரிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதில் அவமானம் இல்லை. - ராஜாஜி

 • சில சமயங்களில் வாய்திறந்து பேசுவதை விடப் பேசாமல் இருப்பதே மிக்க
 பயன் அளிப்பதாகும்.
 - டாக்டர் இராதாகிருஷ்ணன்

 • உண்மையாக நாணயமாக  நடப்பவனுக்கு மக்கள் நெஞ்சத்தில் ஓர் சிறந்த இடம் உண்டு.
 - பெரியார்

 • அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்
 - அண்ணா

 • புகழ்தான் நம்மைத் தேடி வர வேண்டும்; நாம் அதைத் தேடிப் போகக்கூடாது.
 - எம்.ஜி.ஆர்.

 • நம்முடைய உண்மையான தேவைகளைக் கடவுள் மட்டுமே அறிவார்.
 - அன்னை தெரசா

 • நிம்மதியைத் தேடி அலைவதில்  பயனில்லை. அது உங்கள் நெஞ்சுக்குள்ளே இருக்கிறது.
 - பாரதிதாசன்

 • கோபம் வந்துவிட்டால் நியாயங்கள் குழம்பிப் போவது வழக்கம்.
 - நாமக்கல் கவிஞர்

 • படிப்பால் அறிவு வளருமே தவிர,  ஒழுக்கம் வந்து விடாது.
 - மு.வரதராசனார்

வெற்றி வந்தால் பணிவு அவசியம்.
தோல்வி வந்தால் பொறுமை  அவசியம்.
எதிர்ப்பு வந்தால் துணிவு  அவசியம்.
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்

Aucun commentaire:

Enregistrer un commentaire