பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 23 mai 2013

அழிவை நோக்கி

                                                          

பெருகி வரும் மக்கற்கூட்டத்திற்கு இருப்பிட வசதி செய்யவேண்டிய பொறுப்பினால் நிலங்கள் குடியேறும் கட்டிடங்களாக மாறுகின்றன என்பதில் கூட பொருள் இருக்கலாம். ஆனால் பதிலாக விவசாய நிலங்கள் உருவாக்கப்படுவதிலும், நீர்நிலைகள் மாசு நீக்கப்படுவதிலுமுள்ள மெத்தனமே அல்லது பொறுப்பின்மையே உலக சுகாதாரத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. போதாததற்கு வன்முறை அட்டகாசங்கள் வாழ்வையே கேள்விக்குரியதாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அழிவுப் பாதையில் சில உதாரணங்கள்:

பூமியின் வெப்பம் கடந்த 100 ஆண்டுகளில் 1° பாரன் ஹீட் உயர்ந்துள்ளது. சென்ற 30 ஆண்டுகளில் இந்த உயர்வு விகிதம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இது போலவே வெப்ப நிலை உயர்ந்தால், அடுத்த நூறாண்டுகளில் 20 முதல் 30 சதவீத உயிரினங்கள் அழிய வாய்ப்புள்ளதாம்!

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விடக் கடல் மட்டம் 4 முதல் 6 மீட்டர் வரை உயர்ந்திருக்கிறது. ஆனால் இன்னும் 1 மீட்டர் உயர்ந்தாலே மிக அதிக நிலப்பகுதி மூழ்கி விடும் என்கிறது ஐ.நா. சபை!

2009 பட்ஜெட்டில் இந்தியத் தொகைப் பங்கீடு: 

ராணுவம்-ஒரு கோடியே 66 லட்சத்து 663 ஆயிரம் கோடி 
உள் நாட்டுப் பாதுகாப்பு - 37 ஆயிரத்து 300 கோடி 
கல்வி-44 ஆயிரத்து 528 கோடி

28 ஆண்டுகளுக்கு முன் போபாலில் 'யூனியன் கார்பைட் நிறுவனம்' பூச்சிக்கொல்லி மருந்தைத் தயாரிக்க, ஆலையிலிருந்து வெளிப்பட்ட 'மெத்தில் ஐசோ சயனைட்' 5,925 மரணங்கள், 4,902 நிரந்தர ஊனமுற்றோர், 5,63,352 பேர் பாதிப்பு, பிறக்கும் குழந்தைகளில் 25இல் ஒன்று ஊனம் என பயங்கரத்தை ஏற்படுத்தியது. இப்போதும் அந்த இடத்தைச் சுற்றி 350 டன்  நச்சுக் கழிவுகளால்  நிலத்தடி நீர் நஞ்சாகி, ஐ.நா. சபை நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும் 2,400 மடங்கு ரசாயனக் காரணிகள் அடங்கியத் தண்ணீரை அருந்துகிறார்கள். விளைவு புற்று நோயாளிகளும், சிறுநீரக நோயாளிகளும் பெருகி வருகிறார்கள். இன்னும் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று தெரியவில்லை.

ஆண்டுக்கு 2 லட்சம் டன் அபாய வெளிநாட்டுக் கழிவுகள் இந்தியாவில் இறக்குமதி ஆகின்றன.

தில்லிவாசிகளில் 49 சதவீதத்தினர் குடிசைப் பகுதியிலேயே வாழ்கின்றனர்.

ஒரு மணி நேரத்தில் 13 பேர் வீதம் ஒரு வருடத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 590 பேர் இந்தியச் சாலை விபத்தில் இறக்கிறார்கள். தமிழ் நாட்டில் மட்டும் வருடத்திற்கு 12 ஆயிரம் பேர்.

பிறந்து ஒரு மாதத்திற்குள் 5 லட்சம் குழந்தைகளும், 5 வயதைத் தாண்டாமல் 10 லட்சம் குழந்தைகளும் சாகிறார்கள்.

வருடாவருடம் கருச்சிதைவால் மரணமுறும் இந்தியக் குழந்தைகள் 50 லட்சம். சென்ற வருடம் ஒரு கோடிக் கரு, சிசுக் கொலை நடைபெற்றுள்ளது. போதிய சுகாதாரமில்லாமல் பிறந்து இறக்கும் சிசுக்கள்-5500!

கடந்த 5 ஆண்டுகளில் 1,85,452 பெண்கள் தமிழகத்தில் குறைவாக உள்ளனர்.

உலக முழுவதும் 20 ஆயிரம் மரணதண்டனைக் கைதிகள் உள்ளனர். சராசரி 11 வருடங்கள் கழித்தே தூக்கிலிடப்படுகின்றனர்.(90% வக்கீல் வைத்துக்கொள்ள வசதியில்லாத ஏழைகள்).

நீரிலுள்ளக்கனிமங்கள்  அளவு 300 புள்ளிகள் இருந்தால் அது குடிநீர். தமிழ் நாட்டில் அது தற்போது 3000 புள்ளிகளைத் தாண்டி விட்டது!

இந்தியா ஆண்டுக்கு 4 மி.மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. ஆனால் முந்தைய அளவில் இது பாதி. மீன்களின் உருவ அளவும் பாதியாகி விட்டதாம்!

250 கிலோ உணவருந்தும் யானைகளின் உணவு  வழிகளை அழித்து தொழிற்சாலை, அணைகள், வீடுகள் வந்து விட்டதால், அவை கிராமங்களில் நுழையவும், மனிதர்களைத் தாக்கவும், பதிலுக்கு மனிதர் அவைகளைக் கொல்லவும்  நேரிடுகிறது.

இன்றைய ஆமைகள் கடலில் வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன் என உண்டு இறக்கின்றன.

சாயப்பட்டறைக்கழிவுகள் ஆற்று நீரை விஷமாக்குகின்றன. உம் : பாலாற்றங்கரையில் 800 தொழிற்சாலைகள் உள்ளன. அங்குள்ள 46 ஊர்களின் 27800 கிணறுகளை உபயோகப்படுத்த முடியவில்லை!

14 லட்சம் ஏக்கர் நெற் பயிர்கள் காவிரி நீர் இல்லாததால் கருகின.

88 புலிகள் கடந்த ஆண்டு இந்தியாவில் கொல்லப்பட்டுள்ளன .

திருமதி சிமோன் 


Aucun commentaire:

Enregistrer un commentaire