பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 avril 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                          

அன்புடையீர்,

வணக்கம். பல பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் நடுவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விடவும், நமது வாழ்க்கையே சிக்கலாக உள்ளது என்பதுதான் உண்மையாக இருக்கிறது. பெரும்பாலான கணவன்-மனைவியரிடையே பிரிக்க இயலாத, பிரிக்கக் கூடாததான உறவில் சேர்ந்திருப்பதே தண்டனையாக உள்ளது. மலர்க் குவியல் போல அழகு சிந்தும்  குழந்தைச் செல்வங்கள் சுமக்க விரும்பாத சுமையாகக் கருதப்படுகின்றன. போற்றி வந்தச் சென்றத் தலைமுறை, தவிர்க்கப்பட வேண்டிய உறவாகக் கருதப்படுகின்றது.  இப்படி உலக வாழ்வின் ஆதாரமான குடும்ப வாழ்வு ஆட்டம் கண்டு ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

நமது சச்சரவுகளும், மோதல்களும் ஒருபுறம் இருக்கட்டும்! அது தாறுமாறானதாக இருந்தாலும், ஒரு தலைமுறையோடு ஒழிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் வாழ்க்கைச் சுழற்சியின் அடிப்படையான அடுத்தத் தலைமுறையைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது எல்லோருடைய கடமையும் அல்லவா?

அவசரமான, பளு நிறைந்தப் பாதையில் எந்த அளவுக்குப் பொறுப்புக்களைக் கழற்றி விடுகிறோமோ, அந்த அளவு அது புத்திசாலித்தனம் என்கிற மனப்பான்மைதான் அடிப்படையாக இன்று உள்ளது. இதை 'take it easy policy' என்ற போர்வையில், எல்லாவற்றையும் கடந்த நிலையில் வாழ்க்கையைப் பார்ப்பது போன்ற மாயையை உண்டாக்குகிறார்கள். உண்மையில் இவர்கள் பற்றற்று, மனத்தால் விலகி அனுபவங்களைப் பார்ப்பதில்லை. தன்னை எது கட்டுப்படுத்தி விடுமோ என்ற பயத்தில் அதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்!

இதுவே துணிந்து திருமணம் என்னும் கட்டுக்குள் அடைபடவும், குழந்தை என்ற வாழ்நாள் பொறுப்பை ஏற்கவும் தடுக்கிறது. என் வாழ்வு, என்  சுகம்,என் இன்பம் எனத் தன் மயமாகச் சிந்திக்க வைக்கிறது. துன்பங்களை அல்லது மன பாரத்தைத் தவிர்க்கிறோம் என்று கூறி, கடமைகளைத் தட்டிக் கழிக்கிறார்கள். இந்தப் பாதைக்  கருவறையின் கதவைச் சாத்தி, மன பந்தத்தை நீக்கி, வெறும் உடல் உணர்வில் முடிகிறது.

ஒரு படி மேலே போய், தவறி உருவானதை மனசாட்சியின்றி அழிக்கவும் துணிகிறது. குழந்தை அல்லது தாயின் உடல் நிலைக் கருதித் தவிர்த்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். பாதிக்கப் பட்ட பெண்ணொருத்தி தான் மனமறிந்து செய்யாத குற்றத்திற்காக  தண்டனை அனுபவிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகையில் மாற்று வழி தேடலாம். இதில் கூட சம்பந்தப்பட்ட ஆண் மனசாட்சியோடு நடந்து கொண்டால் இந்நிலை தவிர்க்கப்படக்கூடியதே ஆனால் வாழ்க்கை வசதிக்காக, இன்னபிறக் காரணங்களுக்காக ஓர் உயிர்க் கொலை என்பது ஏற்றுக்கொள்ள இயலாததாய் இருக்கிறது. 'கருவைச் சுமப்பவள் பெண். எனவே குழந்தை வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியது அவள் உரிமை' என்றொரு வாதம்.சுமப்பவள் அவள் என்பதால், ஓர் நுண்ணுயிரை அழிக்கும் உரிமையையும் அவளிடம் கொடுத்து விட முடியுமா?  தாய்மை அடையும் எத்தனை இளம் பெண்களுக்குத்  தக்கக் காரணத்தோடு மட்டுமே  இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும் முதிர்ச்சி இருக்கும் என்று சொல்ல முடியும்?

அதுவும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட குழந்தைப் பிறப்பும், அதன் ஆயுளும் முழுதாக மனிதரின் கைகளில் இல்லாத நிலையில், நமக்கு அழிக்கும் உரிமை இல்லை என்றே தோன்றுகிறது!

திருமதி சிமோன் 


Aucun commentaire:

Enregistrer un commentaire