பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 27 mars 2013

நாணயத்தின் மறுபக்கம்

                                                             

காலங்காலமாய் பாலியல் வல்லுறவு என்னும் கொடுமையை பெண்களும், குழந்தைகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. தனித்து எங்கேனும் விடப்பட்டால் ஏதேனும் நடந்து விடுமோ என்ற பயம் பெற்றோர்களுக்கும், உலக நடப்பு அறிந்தவர்களுக்கும் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. அந்த அளவு சுதந்திரமில்லாத, பண்பில்லாத சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதே கொடுமைகள் ஆண்களுக்கும் நிகழ்கின்றன என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தாலும், நிச்சயம் கவலைக்குரியதே! மனதாலும், உடலாலும் அதே பாதிப்பு என்னும்போது முளையிலேயே கிள்ள வேண்டிய ஒன்றே!

பெரும்பாலும் இந்நிகழ்ச்சிகள் கோபம், மேலாதிக்கக் கொடூரம், அடிமைப்படுத்தும் எண்ணம், கூடவே சிறிது பாலுணர்வு ஆகியவற்றால் நிகழ்கின்றன என்கிறார்கள். பெண்ணளவு  ஆண்கள் எதிர்ப்பு காட்டா நிகழ்வுகள், அவர்களது உணர்வுகள் உறைந்து போவதை எடுத்துக் காட்டுகின்றன. தங்களால் கட்டுப்படுத்த இயலாத இயற்கை உடலமைப்பும் ஒரு காரணமாகலாம். 40 சதவீதம் இயல்பு வாழ்க்கை வாழ்பவர்களால் இக்கொடுமை நடத்தப்படுகிறது என்னும்போது நாம் எங்கே போகிறோம்?! இந்த பாதிப்புகளை நிரூபிப்பது சிரமம். பெரும்பாலோர் இத்தகு நிலையை வெளியில் கூற முன்வருவதில்லை. தங்கள் ஆண்மைக்கான தலைக்குனிவு என்று கருதுகிறார்கள். சமூகப் பரிதாபமும், உதவியும் கிடைப்பதும் சற்று சிரமம்.

2009 இல் ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் சுரிஷ் நகரில், மன அழுத்தங்கள், உடல், உள ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக பாதிக்கப்படும் ஆண்களுக்காக ஓர் அமைப்பு ஆரம்பிக்கப் பட்டது.

Men's Movement என்பது திருமணம், குழந்தை தொடர்பான உரிமை பற்றி ஆண்களுக்காக நடத்தப்படுகிறது. இது பெண்ணியக் கொள்கைக்கு எதிரானதல்ல.

உடல் வன்முறை உரிமை பற்றிய இந்தியக் குற்றவியல் சட்டம் (திருத்தியமைப்பு) மசோதா 2010 இன்னும் கருத்தில் கொள்ள வேண்டிய உண்மைகள் பல உள்ளன.

ஒரு தவறுக்கு தண்டனை அளிக்கலாம். ஆனால் தவறே நடக்கா வண்ணம் வாழ முயல்வதே மனிதப் பிறவிக்கழகு. மீண்டும் கற்காலத்தை நோக்கித் திரும்பும் போக்கினை மாற்றி, மனிதத்தை வளர்ப்பது பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் சமூகத்திற்காற்ற வேண்டியக் கடமை!

திருமதி சிமோன் 




Aucun commentaire:

Enregistrer un commentaire