பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 31 décembre 2012

காதலின் தேடல்


நான் நாடுகிறேன்:  உன் தழுவலை..... 
                                        உன் முத்தத்தை.....
                                        உன் இதயத்தை.....
                                        உன் கதகதப்பை .....
                                        உன் மென்மையை .....
                                        உன் மிருதுவான  வார்த்தைகளை .....
                                        உன் காதலை.....
சுருக்கமாக "உன்னை"!


ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி,
இருவர் எனும் தோற்றம் இன்றி, பொரு  வெங் 
கனற்கு ஏயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார் 
புனற்கே புனல் கலந்தாற் போன்று! - நளவெண்பா 


வண்டுவந்து மெல்லமெல்லத் தேடித் தேடி 
மனம்பிடித்த மலர்தன்னில் அமர்தல் போலக் 
கண்டுவந்த கட்டழகன் கண்கள் தாமும் 
கருதில்பொன் மேனிதனில் மோதி அங்கே 
மண்டியவா றிருந்திடவும், நடந்த கால்கள் 
மறுத்திடவும், படையளவும் தயங்கி நிற்க 
ஒண்டொடியின் புன்னகைக்கு உயிரை விட்டு 
உடற்கூடு கால்தூக்கிப் போட்டுப் போகும்! - கண்ணதாசன்


கனவெல்லாம் நனவாகி வந்தாய் - என்
கவிதைக்குப் பொருளெல்லாம் தந்தாய்!
நினைவெல்லாம் நீயாக நெய்தாய் - ஆயின்
நெஞ்சத்தை ஏன்துளை செய்தாய்?

பசிதாக உணர்வெல்லாம் கொன்றாய் - மனப்
பசியென்னும் எரிமூட்டு கின்றாய்!
இசைதோயக் குரல்மீட்டும் போதில் - ஏனோ
ஏக்கத்தின் ஒலிகூட்டு கின்றாய்?

கண்காணும் எழிலாகி நின்றாய் - என்
கைதேடும் பொழுதெங்கு சென்றாய்?
மண்காணும் பொருள்யாவும் நீயாய்க் - கண்டு
மருள்கின்ற மயல்கூடும் பேயாய்!

பக்திக்குச் சிலையாகக் கண்டேன் - என்னைப்
பலியாக்கி விலையாகக் கொண்டாய்!
முக்திக்குத் துணைதேடி வந்தேன் - என்
மனதுக்குள் இருள்கூடி நொந்தேன்! - (யாரோ)

                             
                    மலரும் வண்டும்

இரைக்கென உயிர்கள் இரவும் பகலும்
உரைக்க இயலா ஒன்றிய உணர்வும்
தேடும் விழியும் தேர்ந்த முறையும்
நாடும் வழியும் நால்வகைக் கொண்டு
அல்லல் உறுவது அகில இயற்கை!
எல்லா இனமும் இயல்பென அறியும்
சின்ன மலரின் சிறுதேன் துளிகள்
வண்ண வண்டினை வலிந்து ஈர்க்கும்!              

வாடும் மலராய் வனிதை அவளைக்
கூடும் வண்டாய்க் கோமகன் தன்னை
உருவகம் கொள்ள உவமை தந்தத்
தருணம் எதுவோ தர்மம் தானோ?
காதல் சுவையைக் காமப் பசியாய்
சாதல் மீறியச் சாதனை ஒன்றை
மாற்றிய தேனோ மாறும் உலகில்
ஆற்றும் செயலும் ஆணா திக்கமோ?! - திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire