பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 octobre 2012

அன்றைய நம்பிக்கைகள்

                                               
எகிப்து நாகரிகம் தொட்டு ஒரு, பல கடவுளர் நம்பிக்கை இருந்து வந்துள்ளது. பொதுவாகப்  பிரபஞ்சத்தைப் படைத்து, காப்பவர் ஒருவர் உள்ளார்  என்பதுதான் அடிப்படை. இதில் சுவையான அனுபவம் அல்லது கற்பனைகள் கதைகளாக பின்னர் சேர்ந்திருக்கலாம். வானுலக இறைவன் ஒளிமயமானவர், கருணை வடிவானவர் என்பதில் எதிலும் வேறுபாடில்லை ! அவரைப் பற்றிய அறிவும், ஞானமும் உடையவர்கள் 'குருக்கள்' ஆகவும், அவர் அருளால்  வரும் பொருள் உரைப்பவர்கள் 'தீர்க்கதரிசிகள்' ஆகவும் ஏற்கப்பட்டனர்.

இயற்கை எப்படி வளர்ச்சி, அழிவு, பின் மீண்டும் பிறப்பு எனச்  சுழல்கிறதோ அது போலவே பிறப்பு, வளர்ச்சி, இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியும் இயற்கையானது என்ற எண்ணமும், நம்பிக்கையும் சில மதங்களின் தளமாக உள்ளன . எல்லாவற்றையும் அலசுவது என்பது  இயலாத ஒன்று. ஒரு சில :

   
                                                       

அஞ்ஞானித்  தத்துவம் : (Paganism) இந்த இறை நம்பிக்கைக்கு ஏன் இப்படிப்  பெயர் சூட்டினார்கள் என்று தெரியவில்லை ! (ஒரு வேளை 'தங்களை ஞானிகளாகக் கருதி' தங்களுக்கு முற்பட்டவர்களது நம்பிக்கையை விமர்சிக்கும் வகையில் இருக்கலாம்) அப்ரகாம் வழி வந்த கிறித்தவம், இஸ்லாம், யூதம் சாராத தொன்மையான ஐரோப்பிய நம்பிக்கை.கிறித்தவத்திற்கு முன் ஐரோப்பாவில் செல்வாக்குப் பெற்றிருந்தது.


                                                        

அனைத்து இறைக் கொள்கை:(Pantheism) கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. 'Pan' - அனைத்து, 'theos' - கடவுள். இயற்கை உட்பட பிரபஞ்சமும், கடவுளும் சமம் என்னும் கருத்துடையது. உள்ளவை எல்லாம் கடவுளால் வந்தது மட்டுமல்ல, கடவுளில் கலந்தது என்னும் கருத்து. வலம்புரிச் சங்கும், விண்மீன் திறள்களுமான குறியீடு கொண்டது. உயிர்களும், விண்கோள்களும் இணைந்த நிலை இப்படிக் காட்டப்படுகிறது. சங்கு, விண்மீனின் புரிகள் பரிணாமம், ஆன்மிகம், வளர்ச்சி முதலியவற்றைக் குறிப்பிடுகின்றன.

இதில் 'கடவுளை ஏற்கும்'-'கடவுளை மறுக்கும்' என இரண்டு வகை உண்டு.
 1. கடவுள் காலம் கடந்தவர். அனைத்தையும் உண்டாக்குபவர். உலகு, காலம் இவை அவரின் வெளித்தோற்றம் அல்லது உருமாற்றம். அதாவது கடவுள் நிலையாக நின்று இயற்கையை அவரின் பகுதியாகச் செயல்படுத்துவது.
2.இயற்கையின் ஒரு பகுதியே கடவுள். அல்லது கடவுளும் இயற்கையின் கூறே !

இந்து மதக் கொள்கை இன்னதுதான் என்று வரையறுப்பது எளிதில்லை என்றாலும், இந்த அடிப்படையைக் கொண்ட புராதன சமயமாக அது உள்ளது. பிரம்மம் ஒன்றே 'உள்ள' பொருள். அதன் கூறுகள் பிரபஞ்சம், உயிர் என வெளிப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் வேத நூலிலும், உபநிடதங்களிலும் உள்ளன. 'தத்துவமசி', 'அகம் பிரம்மாஸ்மி' போன்ற வார்த்தைகள் இந்து சமய அனைத்து இறைக் கொள்கைக்கு அடித்தளம்.
'ஆளுறவு  கடவுள் கொள்கை' யும் இந்து மதத்தில் உள்ளதால் பக்தி, வணக்கம் போன்றவை இருந்தாலும், கடவுளும், ஆன்மாவும், பிரபஞ்சமும் பரபிரம்மத்தின் வெளிப்பாடே என்னும் கருத்தும் உள்ளதால், அனைத்து இறைக் கொள்கையின் ஆழ்ந்த அடிப்படையும் இதில் அடங்கியுள்ளது.

                                                             

ஒலிம்பியக் கடவுளர் : கிரேக்க ஒலிம்பஸ் மலை உச்சியில் வாழ்ந்த 12 கடவுளர். மொத்தம் 17 கடவுள்கள் இப்படிச் சொல்லப்பட்டாலும், ஒரே நேரத்தில் 12 பேர் மட்டுமே குறிக்கப்பட்டனர். இந்தியக் கடவுள்கள் போல் கடவுளுக்கு உடன் பிறப்புகள், மனைவி மூலம் பிறந்தவர்கள் என்று உறவுமுறையாளர்கள் உண்டு.

திருமதி சிமோன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire