பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 29 août 2012

நாடகத்தில் நகைச்சுவை

                                                      

பொழுது போக்கிற்கென உள்ளக் கலைகளில் நகைச்சுவை இன்றியமையாதது. அதுவும் நேர்காணல் முறையில் அதற்குள்ள வரவேற்பும் பாராட்டும் அளவிட முடியாதது . வாழ்க்கையில்தான் பலத் துயர்களை அனுபவிக்கிறோம், பொழுதுபோக்கிலாவது சிரித்துவிட்டு வருவோம் என்று  எண்ணுபவர்களுக்கு அது ஒரு பெரிய வரம் . அவர்கள் மனதை இலேசாக்கி மகிழ்ச்சியோடு வீடு திரும்ப வைக்கும் கலைஞர்கள் ஒரு வகையில் சமூக சேவையே செய்கிறார்கள் ! அவர்களுள் ஒரு சில குறிப்பிடத்தக்கவர்கள் :

                                                        

எஸ் .வி . சேகர் : 1974 இல் முதல் மேடை ஏறினார் . மைலாப்பூர் பாயிஸ் நாடகக் குழு மூலம் இவரது திறமை பளிச்சிட்டது . 50 (play)நாடகங்கள், 100 நாடகத் தொகுப்புகள்  (skript), 96 தமிழ்ப்படங்கள்  ,டிவி நிகழ்ச்சிகள் இவற்றோடு  நல்லப் புகைப்படக் கலைஞர்  என்ற பெயரும் இவரைச் சேரும் . 'நாடகப்ப்ரியா' என்ற அமைப்பை  1973 இல் ஆரம்பித்து 24 நாடகங்களை 4000 முறை வெளிநாடுகள் உட்பட நடத்தியுள்ளார் . 8 முழு நீள நாடகங்களைத்தொடர்ந்து ஒரே நாளில் நடத்தி  "லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" இல் 1985இல் இடம் பெற்றார்.

'பெஸ்ட் ஆல் இந்திய அவார்ட்'  நான்கு முறை இவரை அடைந்தது .'மைலாப்பூர் அகாடமி' 3 வருடம் இவரை 'சிறந்த சிரிப்பு நடிகர் ' ஆகத் தேர்ந்தேடுத்தது. 'விஸ்டம்' என்ற இதழ் 1990 இன் சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை அளித்தது .  இன்னும் 'கலை மாமணி', 'கலைவாணர் அவார்ட் ', 'பெஸ்ட் டிராமா  ட்ரூப் அவார்ட்' பெற்ற இவர் 2006  அதிமுகவில்  இணைந்தார் .

ஒரு முறை நாடகத்தின்போது கரண்ட் நின்று விட்டதாம். கதைப்படி பெண்பார்க்கச் சென்றிருந்த சேகர், கரண்ட் வந்ததும் 'இந்தப்பெண் ராசியில்லை-எனக்கு வேண்டாம்'  என்று பொருத்தமாகச் சொல்லி எல்லோர் டெண்சனையும்  குறைத்து சிரிக்க வைத்தாராம் !

                                                      
                                                           

ஒய்.ஜி . மகேந்திரன்: நடிகர் ,பாடகர் ,கதைவசன  நாடக கர்த்தா, காமெடி ஆர்டிஸ்ட் என பன்முகம் கொண்டவர் .200 படங்கள் போல் நடித்தவர் . 1982 இல்      industrial ceramics  தொழில் ஆரம்பித்து 2001 இல் விற்று விட்டார் .

தந்தை ஒய் .ஜி.பார்த்தசாரதி "தமிழ் நாடகத்தூண்" என அழைக்கப்பட்டவர் . அவர் ' united amateur artists' என்ற நாடகக் கம்பெனியை  1952 இல் ஆரம்பித்ததால்  சிறு வயதிலேயே மகேந்திரனுக்கு நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது . அம்மா ராஜலட்சுமி 'பத்மா சேஷாத்திரி பாலபவன்' நிறுவனர் . வைஜயந்தி மாலா, லதா ரஜினி, சாவித்திரி போன்றத் திரையுலக உறவினர்களைக் கொண்டவர் . கமல் ,ரஜினி போன்றோரின் நண்பர் .


                                                               

கிரேசி மோகன் : 'தமிழ் மன்றம்' தலைவரான நண்பன் மூலம் நாடக உலகிற்கு வந்தவர் . 1973 ஆம் வருடம்  சொந்தப்  பெயரிலேயே கம்பெனி ஆரம்பித்தார். பல பெயர்களில் 1994 வரை பலரோடு நடைபெற்ற அது கலைக்கப்பட்டாலும்  இன்னும் நாடகங்கள் நடைபெறுகின்றன . 200 நகைச்சுவை நாடகங்கள், தொலைக்காட்சி , சினிமா என்று சுற்றி வந்தவர் . இவரது சகோதரர் 'மாது பாலாஜி' இவர் நாடகங்களின் கதா நாயகர் .

திருமதி சிமோன்

     

1 commentaire: