பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 29 juillet 2012

கலை நயமும், கலாச்சாரமும்

                                                      


பிரான்சு அல்லது பாரிஸ் என்றாலே அதன் சின்னமாகப் பொறிக்கப்படுவது ஐபில் கோபுரம்தான்! இந்நாட்டின் இரண்டாவது சுற்றுலாப் பயணிகள் குமிழும் இடம். 312 மீட்டர் உயரம். 125 மீட்டர் அகலம். 10,100 எடை கொண்டு பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் இதில் 18,038 இரும்பு பட்டைகளும், 2,500,000 ஆணிகளும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றன. இரண்டாவது தளம் வரை 1665 படிகள் உள்ளன. 276 மீட்டர் உயரத்தில் உள்ள மூன்றாம் தளத்தில் கண்காட்சி (musée de cire)  உள்ளது. இதை நிர்மாணிக்க 41 வருட உழைப்புத் தேவைப்பட்டது. 1887-1889 இல் கட்டப்பட்டு, 31-3-89 இல் திறப்பு விழா நடந்தது.

7.1 மில்லியன் மக்கள் வருடந்தோறும் இதைக் கண்டு களிக்கிறார்கள் எனினும் கட்டுவதற்கு முன் பல கலைஞர்கள் எதிர்ப்பை இது சந்தித்தது. வெறும் இரும்புப் பட்டைகளால், கலை உணர்வுக்கு இடமில்லாது நகரின் நடுவே பிரதானமாக கட்டப்படுவதில் அவர்களுக்கு உடன்பாடில்லை! ஆனால் இதன் வேலை முடிவதற்குள்ளாகவே பலர் ஓவியம், நவீனம், புகைப்படம் போன்றவற்றில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்று ஐபில் கோபுரம் இல்லையேல் பிரான்ஸ் இல்லை!

வருடந்தோறும்  14 ஆம் தேதி ஜூலை மாத இரவில் வாணவேடிக்கை இங்கு நடைபெறும். இதனருகே நடக்கும் concert, exposition போன்றவற்றுக்கு மதிப்பும் கூட்டமும் அதிகம்.


                                         


1623 - அரசன் லுய் XIII வேட்டையின்போது கூடுவதற்காக பலதரப்பட்ட மனிதர்களிடம் 350 ஹெக்டார் நிலத்தை வாங்கினார். இன்றைய 'வெர்சேய்' யின் அன்றைய ஆரம்பம் இதுதான்! பிறகு லூயி XIV 1682-1789 களில் கட்டியதே இம்மாபெரும் கோட்டை. அப்போது மன்னர்களின் இரும்புக் கதவு "Grille du Roi" என்றழைக்கப்பட்டது. சுற்றிலும் 180 மீட்டர் வரைக் காடுகளும், பசுமையும் நிறைந்திருக்க, அரச ஆடம்பரத்துக்காக 'உருவாக்கப்பட்ட ஓர் நகரம்'. 150 மீட்டர் உயரத்தில்  பிரமிக்க வைக்கும்  கோட்டையும், பரந்து விரிந்த தோட்டமும், கண்ணைக் கவரும் சிலைகளும் இன்றளவும் எல்லோரையும் கவர்கின்றன. வருடத்திற்கு 695.5mm மழை பெய்வதால் செழிப்புக்குப் பஞ்சமில்லை. (climat océanique) குளிர் காலத்தில் 6.1°c, கோடையில் 23.9°c என மிதமான, இதமான தட்ப வெப்ப நிலை. (2009  இலேயே 86,477 குடிமக்களைக் கொண்டது)

லூயி பிலிப் 1837 இல் 'பிரான்சின் வரலாற்று அருங்காட்சியகம்' ஒன்றை இதில் ஆரம்பித்தார். 1805 இல் ( Pie VII ) போப் நெப்போலியனுக்கு முடி சூட்ட வந்தபோது, இங்கு அழைக்கப்பட்டார். அரச குலத்தவர் கொண்டாட்ட இடமான இக்கோட்டை   "புரட்சியின் தொட்டில்" எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில்  புரட்சித்தலைவர்கள் 'தேசிய அசெம்பெலி' என்ற பெயருடன் 1789 இல் இதைக் கைப்பற்றினர். பின்னர் ஒரு கூட்டம் கோட்டையின் உள்ளே புகுந்து அரச குடும்பத்தை பாரீசுக்கு வர வைத்தது. அங்கே அவர்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளியும் இடப்பட்டது.

1999 இல் பிரான்சைப் புரட்டிப் போட்ட புயல் இங்குள்ள மரங்களை வேரோடு சாய்த்தபோதும், மீண்டும் இதன் அழகு நிர்மாணிக்கப்பட்டது. கோடைக் காலத்தில் 250 க்குக் குறையாத நாடகம்,சர்கஸ்,கான்செர்ட் போன்றவை நடைபெறுகின்றன. இப்போது பெரும் இரும்பு வண்டிகள், கார்கள் போன்றவையும், 218 டன் எடையுள்ள, பாலம் கட்ட உதவும் இரும்பு இயந்திரம் ஒன்றும் ஒரு பக்கத்தில் தஞ்சமடைந்துள்ளன.

UNESCO வேர்சாய் ஒரு பரம்பரைச் சொத்து என்ற ( claasé Patrimonie mondial de unesco) தகுதியை வழங்கியுள்ளது. 


                                                  


 1,35,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த லூவ்ர்அருங்காட்சியகமும் அரசர்களின் அரண்மனையாக இருந்ததுதான். தற்போது ரோமன் பார்லிமென்ட்டுக்குப் பின் இரண்டாம் பெரிய கட்டடமாகவும், உலகத்திலேயே சிறந்த கருவூலங்களைக் கொண்ட அகமாகவும் காட்சி அளிக்கிறது. 2011 இல் 8.9 மில்லியன் பார்வையாளர்களைக் கண்ட இது சார்லஸ் V  தான் வசிப்பதற்காக கட்டியது. லூயி XIV வரை 800 வருட அரச உடைமையாக விளங்கியது. பிலிப் ஒகுஸ்த் தன் பாதுகாப்புக்காக சுற்றிலும் 31 மீட்டர் உயரமும், 19 மீட்டர் அகலமும் கொண்டதாக 1202 இல் கட்டிக்கொண்டார். பின்  வந்தவர்களின் விருப்பத்திற்கிணங்க பலவகைகளில் விரிவுபடுத்தப்பட்டது. புரட்சி வரை மன்னர்கள் ஆதிக்கத்தில் இருந்த பின்னர் கைவிடப்பட்டது.

போர் அழிவுக்குப்பின் 1692 இல் அகாடெமி ஓவியம், சிற்பங்கள் இவற்றை அதிகப்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவே ஹென்றி IV 'Grand Dessin' என்ற பெயரில் அரண்மனையின் ஒரு பாகத்தை அழகுபட அமைத்திருந்தார். 1790 இல் தேசிய அச்செம்ப்லி இந்த அரண்மனையைக் காப்பாற்ற நாட்டுடைமை ஆகியது. 1871 இல் நெருப்பில் தீக்கிரையானப் பகுதியை 1880 வரை சீர்படுத்தினார்கள். பின்னர் சரித்திரச் சின்னமாகிய இவ்வரண்மனையில் 1981-1999 பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் 1989 இல் பிரான்சுவா மிதேரானால் திறக்கப்பட்ட கண்ணாடி பிரமிடும் ஒன்று. ஆனால் இது அந்தப் பழைய கம்பீரத்தைக் குறைப்பதாகவும் தோன்றுகிறது.

திருமதி சிமோன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire