பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 26 juin 2012

அரசியல் நாடகங்கள்

                                        
                                               
முதல்வர் மாயாவதி:உத்திரப் பிரதேசத் தீயணைப்புத் துறையின் டி.ஐ.ஜி. தேவேந்திரநாத் மிஸ்ரா, தன்துறையில் ஊழல் இருக்கிறது என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் .

மாயாவதி மிஸ்ராவுக்கு புத்தி பேதலித்துவிட்டது என்று மனநல மருத்துவர் மூலம் சான்றிதழ் பெற்று மருத்துவமனையில் சேர்த்து , ஒரே வாரத்தில் விடுவித்து விட்டார் ! இனி அவருக்குப் பேச வாயேது ?!

2007- லக்னோ மால் அவென்யுவில் 5 ஏக்கர் நிலத்தில் அரசுப் பணத்தில் ரூ .86 கோடி செலவில் மிகப் பெரிய பங்களா கட்டியுள்ளார்.


                                                         

மம்தா பானர்ஜி :கொல்கத்தாவில் பவானிப்பூர் காவல் நிலையத்தில் அடைபட்டிருந்த திரினாமுல் கட்சித் தொண்டர்களைக் கட்சித் தலைவியும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா, போலீஸ் ஸ்டேஷன் சென்று (ரவுடித்தனத்திற்காகக்கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள்)ஆர்ப்பாட்டம் செய்யாத குறையாக மீட்டார்! ஒரு முதலமைச்சர் இதை விட எப்படி தன் நன்றியைக் காட்ட முடியும்?!


                                                                                         
                                                                     
ஜெயலலிதா:பதவி ஏற்ற ஆறு மாதங்களில் ஏழு அமைச்சர்கள் பணிநீக்கம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின்தொடர்மாற்றம் என இவரது நிர்வாக விளையாட்டு விளக்கம் இல்லாப் புதிர். சிறு வயதுபந்தாட்டம் மறக்கவில்லை போலும்!

'அண்ணா ' நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவ மனையாக மாற்றியுள்ளார்!ஒன்றுக்கொன்று இலவசஇணைப்போ?

தி.மு.க. அரசு 1989 இல் 25,000 மக்கள் நலப் பணியாளர்களை தற்காலிகமாக அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நியமித்தது.(தன்கட்சி ஆட்களுக்காகவே இது உருவாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.உண்மைஎன்னவோ) அடுத்த 2 ஆண்டுகளில் பதவிஏற்ற இவர் கட்சிஅவர்களைப் பணி நீக்கம் செய்தது.(இத் திடீர் அதிர்ச்சி கிட்டத்தட்ட 50 பேர் உயிரைக்குடித்தது)மீண்டும்1996இல் பதவி ஏற்ற திமுக ஒரு ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களாக அவர்களைப் பணியமர்த்தியது.2001இல் பதவிக்கு வந்த அ .இ .அ .தி.மு.க .பதினைந்தே நாட்களில் அவர்களை வீட்டிற்கு அனுப்பியது.2006இல் ஆட்சியைப் பிடித்த திமுக மறுபடியும் 13500 பேரை தற்காலிகப் பணியாளர்களாக நியமனம் செய்தது. இந்தப் பணி ஒப்பந்தம் 31-5-2012 வரை நீடித்தது.தற்போது பதவியிலுள்ள 'அம்மா' அரசு 8-11-2011இல் மூன்றாம் முறை பணி நீக்கம் செய்தது. சளைக்காத விளையாட்டாக இல்லை?! எப்படியோ 13500 பேரின் இன்பமும், துன்பமும் இவர்களால் புரட்டிப் புரட்டிப் போடப் படுகிறது.

இவரது சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு முடியாதத் தொடர்கதை ! இவருடைய வளர்ப்பு மகன் திருமணத்தில் இவரும் இவர் 'உயிர்த் தோழி'யும் அணிந்திருந்த  நகைகள் எடை போட்டுப் பார்க்க மாளாதவை !


                                                       

கருணாநிதி :


1972 இல் விவசாயிகள் போராட்டத்திலும், 1977இல் பிரதமர் இந்திராவை அவசர நிலை பிரகடனத்திற்காக மதுரையில் எதிர்த்தபோதும் பகிரங்கமாக வன்முறையில் ஈடுபட்ட திமுக , பின்னர் தன் போக்கை மாற்றிக் கொண்டது.

(பொதுவாக திமுக, அண்ணா திமுக இரண்டுமே அடியாட்கள் கொண்டு, தங்களுக்கு சாதகமான முறையில் காரியங்களைச் சாதிப்பவர்கள் என பெயர் எடுத்தவர்கள் !)

1976 கலைஞர் ஆட்சி வீராணம் லஞ்ச ஊழல் புகார் காரணமாகக் கலைக்கப்பட்டது.

2008-2009 களில் இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, "நாம் வேறொன்றும் செய்வதற்கில்லை" எனப் பேட்டி கொடுத்தார்.

2007இல் மேம்பால ஊழலுக்காகஇவரது கழக உறுப்பினர்கள் கிரிமினல் குற்றம் , தவறான ஆவணங்கள் , ஏமாற்றுதல் , நம்பிக்கைத் துரோகம் போன்ற வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றனர் !

இப்போதெல்லாம் "தார்மீகப் பொறுப்பு" ஏற்று , பெரும்பாலானத் தலைவர்கள் தன் பதவியைத் துறக்க முன் வருவதை எதிர்பார்ப்பதற்கில்லை !



Aucun commentaire:

Enregistrer un commentaire