பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 30 mai 2012

கவிதை ஊற்று



கவிஞர்கள் தங்கள் உணர்வுகளை,எண்ணங்களை மட்டுமே கவிதைகள் மூலம்வெளிப்படுத்துவதில்லை.சமூகநலன் கருதிபலவகை வாழும் முறைகளையும்,மனித இயல்புகளையும், அதில் மாற்றங்களையும், உயர்ந்த நோக்கங்களையும்பொறுப்புணர்வோடு கவிதையாக்குகின்றனர். இன்னும் சொல்லப்போனால்ஒரு உண்மைக் கவிஞனின் பரந்த மனம் மனித இனத்தின் தரத்தைஉயர்த்துவதையே குறிக்கோள் எனக்கொள்ளும்.காலம் மாறினும்,கவிதையின்வடிவமும் சொல்லும் முறையும் மாறினும் நோக்கம் மாறுவதில்லை. கீழ்கண்ட கவிதைகள் இக்கூற்றுக்கு சான்றாகும்:

மனைக்குவிளக்கம்மடவார் -மடவார் 
தமக்குத்தகைசால்புதல்வர் -மனக்கினிய 
காதல்புதல்வர்க்குக்கல்வியே -கல்விக்கும்
ஓதில்புகழ்சால்உணர்வு ! (சங்கஇலக்கியம் -நான்மணிக்கடிகை )

மக்களொடுமகிழ்ந்துமனையறங்காத்து 
மிக்ககாமத்துவேட்கைதீர்ந்துழித் 
தலைவனும்தலைவியும்தம்பதிநீங்கித்
தொலைவில்சுற்றெமபடு துறவரங்காப்ப -(நம்பியகப்பொருள்விளக்கம்)

என்னைநன்றாய்இறைவன்படைத்தது 
தன்னைநன்றாய்த்தமிழ்செயுமாறே!-திருமூலர் 

வேண்டுதல்வேண் டாமைஇலானடிசேர்ந்தார்க்கு 
யாண்டும்இடும்பைஇல.-குறள் 

அறவோர்க்களித்தலும்,அந்தணர்ஓம்பலும் 
துறவோர்க் கெதிர்தலும்தொல்லோர்சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் ............-(சிலப்பதிகாரம்-இளங்கோவடிகள் )

இல்லாள்அகத்திருக்கஇல்லாததொன்றில்லை 
இல்லாளும்இல்லாளே யாமாயின் -இல்லாள் 
வலிகிடந்த மாற்றம்உரைக்குமேல்அவ்வில் 
புலிகிடந்ததூறாய்விடும்-ஔவை 

பெற்றநலத்தையும்பிறந்த பொன்னாடும் 
நற்ற வானிலும்நனி சிறந்தனவே -பாரதி 

உணர்வெனும் கனலிடைஅயர்வினைஎரிப்போம் 
'ஒருபொருள்தனி'எனும்மனிதரைச்சிரிப்போம் 
இயல் பொருள்பயன்தர மறுத்திடில்பசிப்போம் 
ஈவதுண்டாம்எனில்அனைவரும்புசிப்போம்.-பாரதிதாசன்  

நினைத்தவுடன் அத்தனையும் நேரில்கிடைக்குமெனில் 
முயற்சிஎனும்ஒன்றைநீமுழுதும்மறந்திருப்பாய்!..........
ஞாலத்தில்நீஒருவன்நடத்துஉந்தன்நாடகத்தை 
காலத்தின்சிந்தனையில்கனவெனவோ,நனவெனவோ?-கண்ணதாசன் 

ஊக்குவிக்க ஆ ளிருந்தால்ஊக்குவிப்பவன்கூட 
தேக்குவிப்பான் -வாலி 

வாழ்க்கைபூட்டிக்கிடக்கிறது .
சிரிப்புச்சத்தம்கேட்கையில் 
அதுதிறந்துகொள்கிறது.
பகலில்சிரிக்காதவர்எல்லோருக்கும் 
மரணம்ஒவ்வொருசாயுங்காலமும் 
படுக்கைத்தட்டிப்போடுகிறது.-வைரமுத்து 

ஒருஉயிர்துடிக்கும்போது 
யாரும்கவனிக்கமாட்டார்கள் 
அதுநின்றபின்எல்லோரும்துடிப்பார்கள் -யாரோ 

தொகுப்பு:திருமதிசிமோன்  



1 commentaire:

  1. வணக்கம்,
    மனமார்ந்த வாழ்த்துக்கள், கர்த்தர் உங்களுக்கு நீண்ட வாழ்வினை கொடுத்து, உங்கள் தமிழ் பணி தொடர வேண்டுகிறேன்......
    அன்புடன்,
    மனிதன்

    RépondreSupprimer