பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 30 mai 2012

உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை


உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை
(World Tamil Poets Organization)





பேரவையின் தோற்றம்

உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை 1987-ம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 6-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்ற பொழுது 18-11-1987 அன்று கோலாலம்பூர் மலேசியா பல்கலைக்கழகத் திறந்த புல்வெளித்திடலில், பலநாட்டுத் தமிழ் அறிஞர்களும், கவிஞர்களும், உவமைக் கவிஞர் சுரதா தலைமையில் கவிமாமனி சாத்திரி வெங்கட்டராமன் முன்னிலையில் கூடி "உலகத் தமிழ் கவிஞர் பேரவை"யை உருவாக்கினர்.

அமைப்பு


இப் பேரவை தமிழ் கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கான உலகலாவிய மாபெரும் அமைப்பாகும். இது உலகம் முழுவதுமுள்ள 72 நாடுகளில் தற்போது இயங்கி வருகிறது. அந்தந்த நாட்டிற்கும் அமைப்பாளர்கள் உள்ளனர். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு மாநில அமைப்பாளர்களும், தமிழ்நாட்டில் தமிழ் மாநில செயலாளரும், மாவட்டங்களுக்கு மாவட்ட அமைப்பாளர்களும் இருந்து இப் பேரவையை இயக்கி வருகின்றனர்.


ஆரம்ப காலத்தில் உலக அமைப்பு முழுமைக்கும் தலைவராக உவமைக் கவிஞர் சுரதா அவர்களும், பொதுச்செயலராக தமிழ் நெப்போலியன் கவிமாமணி சாத்திரி வெங்கட்டராமன் அவர்களும், தமிழ் மாநில செயலாளராக சிந்தனைக் கவிஞர் கவிமாமணி பனப்பாக்கம் கு.சீத்தா அவர்களும் இருந்து இயக்கி வந்தனர்.

தற்போது, உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் மறைவிற்குப் பின் பேரவையின் நிர்வாகிகள் மாற்றியமைக்கப்பட்டு, பேரவையின் நிறுவனராக சுரதா அவர்களும், உலக அமைப்பின் தலைவராக முன்னாள் தமிழக அரசவைக் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியரும், தமிழக சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான திரு கவிஞர்.முத்துலிங்கம் அவர்களும், பொதுச்செயலாளராக பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற சிந்தனைக் கவிஞர் கவிமாமணி பனப்பாக்கம் கு.சீத்தா அவர்களும், அமைப்புச் செயலாளராக திரு. தமிழ் சக்தி அவர்களும் இருந்து இப் பேரவையை இயக்கி வருகின்றனர்.

இப் பேரவைக்கு உலகமுழுவதும் உறுப்பினர்கள் உள்ளனர். தற்போதும் சேர்ந்த வண்ணம் உள்ளனர்
 உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை தங்களை அன்புடன் வரவேற்கின்றது!

தமிழ் ஆர்வளர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிடவும், தங்கள் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை இணையத்தில் பங்கு பெறவும் புதிய உறுப்பினர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
நன்றி: இணையம் 
  

Aucun commentaire:

Enregistrer un commentaire