அன்புடையீர்,
வணக்கம். என்றுமே எழுத்து மனித நாகரிகத்தின் எடுத்துக் காட்டாக விளங்கி, வாழ்க்கையை அடுத்த சந்ததிக்குப் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம், மனிதன் தன்னைத் திருத்திக்கொள்ளவும், முன்னேறவும் வழி வகுக்கிறது.
தமிழர்கள் பெரும்பாலும் பழமை விரும்பிகள். என்னதான் பெருமைக்குரிய வரலாற்றையும், பண்பாட்டையும் கொண்டிருந்தாலும் தற்காலத்தில் தன்னைச் சுற்றி உள்ள உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியக் கட்டாயம் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. அது நமது வருங்காலத்தை செப்பனிடவும் உதவும்.
இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்கள் மூலம் கண்முன் நமது சமூக வாழ்வைப் பிரதிபலிப்பதை சற்றே கூர்ந்து கவனிப்போம்!
திருமதி சிமோன்
வணக்கம். என்றுமே எழுத்து மனித நாகரிகத்தின் எடுத்துக் காட்டாக விளங்கி, வாழ்க்கையை அடுத்த சந்ததிக்குப் படம்பிடித்துக் காட்டுவதன் மூலம், மனிதன் தன்னைத் திருத்திக்கொள்ளவும், முன்னேறவும் வழி வகுக்கிறது.
அறிவார்ந்த எழுத்துக்கள் வழியே இலட்சியங்களும், கனவுகளும் பரவுகின்றன. மனக் கொந்தளிப்புகளுக்கு மாற்றும், தத்துவார்த்த விளக்கங்களும் அமைதிப் பாதைக்கு வழி காட்டுகின்றன.புனையப்படும் இலக்கியங்கள் ரசனையை வளர்த்து வாழ்க்கைக்கு சுவை ஊட்டுகின்றன.
எழுத்தாளர்கள் பல விதம். பல் வேறு துறைகளில் விமர்சனம் செய்கிறவர்கள், அத்துறைகள் சம்பந்தப்பட்டச் செய்திகளை மக்களிடம் எடுத்துச் சொல்பவர்கள், அவற்றைக் கண்டித்துத் திருத்த முயல்பவர்கள், முற்றிலும் மாறானக் கருத்துக்களை முன் வைத்து சமூகத்தை வழி நடத்திச் செல்பவர்கள் என எழுத்து ஒரு ஆயுதமாகி இன்றைய உலகின் அச்சாணியாக விளங்குகிறது.
எழுத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் ஜனநாயகம் செழித்து வளரும்.பல்வேறு தரப்பட்டக் கருத்துகள், ஒரு செயலைப் பற்றி எழுகையில் அதைப் பற்றியக் கண்ணோட்டம் விரிவாகி, தெளிவான பார்வை கிடைத்து, உரிய முடிவினை எடுப்பது இலகுவாகிறது.
தமிழர்கள் பெரும்பாலும் பழமை விரும்பிகள். என்னதான் பெருமைக்குரிய வரலாற்றையும், பண்பாட்டையும் கொண்டிருந்தாலும் தற்காலத்தில் தன்னைச் சுற்றி உள்ள உண்மை நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டியக் கட்டாயம் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. அது நமது வருங்காலத்தை செப்பனிடவும் உதவும்.
இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்கள் மூலம் கண்முன் நமது சமூக வாழ்வைப் பிரதிபலிப்பதை சற்றே கூர்ந்து கவனிப்போம்!
திருமதி சிமோன்