பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 19 décembre 2011

இன்றைய அறிமுகங்கள்


  ஜெயகாந்தன்:

கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக எழுத்துலகில் தனிப்பட்ட இடத்தில் இருப்பவர்.  இவர் எழுத்துகளில் உண்மை பேசும், ஆன்ம தரிசனம் கிடைக்கும். இப்படிச் சொல்வதன் மூலம் இவர் ஆன்மிக எழுத்தாளர் என்று பொருளல்ல. தன் பாத்திரப் படைப்புகளின் வழியே மனச்சான்றினைப் படம் பிடித்துக் காட்டுபவர்.  வாசகரின் விருப்பத்தினை மனதில் கொண்டு கதைப் புனையாமல், பாத்திர தர்மத்திற்கொப்ப எழுதுவதே இவருடைய பலம்.
13  சிறுகதைத் தொகுப்பு
38  நாவல், குறுநாவல்
10  கட்டுரைத் தொகுப்பு
  2  அரசியல், கலை உலக அனுபவம்  2 வாழ்க்கை வர்ணனைகள்எழுதியவர். 
"உன்னைப் போல் ஒருவன்" என்ற தன் கதையைத் திரைப்படமாகத் தானே இயக்கி எடுத்தார். அது "சிறந்த மாநிலப் படம்", "ஜனாதிபதியின்  வெண்கலப் பதக்கம்" போன்றப் பெருமைகளைப் பெற்றது.
சில கவிதைகளும் எழுதிஉள்ளார். "தென்னங்கீற்றுச் சோலையிலே" என்ற கவிதை திரைப்படமொன்றில் இடம் பெற்றுள்ளது.

இவரது "சில மணி நேரங்களில் சில மனிதர்கள்" சாகித்திய அகாடமி பரிசு பெற்றது.

இனி இவரது கை வண்ணத்தில்:

அவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும் புதியதாய் மலர்ந்துள்ள ஒரு பூவின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று, நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு, சின்ன உருவமாய் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய்விடலாம் போலக் கூடத் தோன்றும்...

அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வந்து, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.....

வெளியே... வானம் கிழிந்து அறுபட்டது! மின்னல்கள் சிதறித் தெறித்தன! இடியோசை முழங்கி வெடித்தது!

ஆ! அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்!

காலத்தின்அலைகளால்எற்றுண்ட,மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து
ஓய்ந்த ஓர் ஆத்துமாவின்  கதை இது!




புதுமைப் பித்தன்:
பதினைந்து வருட குறுகிய காலத்தில் நூறு சிறுகதைகளும், அவற்றுக் கிணையான கட்டுரைகளும், பதினைந்து கவிதைகளும் எழுதிக் குவித்தவர்.
தமிழுக்குப் புதிய பார்வை இவர் மூலம் கிடைத்தது. "இலக்கியத்தில் ஒரு சிலவற்றைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்பது மரபாயிருக்கிறது. இராவணனையும், அவன் மன விகாரத்தையும் பற்றிப் பேசலாம் என்றால், நடைமுறையில் இருக்கும் ஒரு வேசியைப் பற்றி ஏன் பேசக்கூடாது? வேதாந்தியின் கைகளுக்கு அடங்காத கடவுள் போல்தான் நான் பிறப்பித்து விட்டவையும்!  உங்கள் அளவு கோலில் அவை அடைபடா விட்டால் நானோ அல்லது என் படைப்புக்களோ குற்றவாளிகளல்ல". என்று துணிவுடன் கூறியவர்.

தமிழ்ச் சினிமா வசனகர்த்தாவாகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும்
இருந்திருக்கிறார்.

இவருடைய "சாப விமோசனம்"  அகலிகையின் உயிர்ப்பினை மறு கோணத்தில்  பார்க்க வைத்தது. அவரது வார்த்தைகளில்:

சீதையும், ராமனும் தன்னைப் பார்க்க வருவார்கள் என்று அகலிகை உள்ளம் பூரித்தாள்....இராவணன் தூக்கிச் சென்றது, துன்பம், மீட்பு எல்லாவற்றையும் துன்பக் கறை படியாமல் சொன்னாள் சீதை. ராமனுடன் சேர்ந்துவிட்ட பிறகு துன்பத்திற்கு அவளிடம் இடம் ஏது? அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். "அவர் கேட்டாரா?...நீ என் செய்தாய்? என்று கேட்டாள் அகலிகை. "அவர் கேட்டார், நான் செய்தேன்" என்றாள் சீதை அமைதியாக!

அகலிகை மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவளுக்கு ஒரு நீதியா? சீதை அரண்மனைக்குப் போவதற்காக வெளியே வந்தாள். அகலிகை வரவில்லை!  இது ராமன் மனசைச் சுட்டது. காலில் படிந்த தூசி அவனைச் சுட்டது.

உள்ளே வந்த கோதமன் அகலிகையைத் தழுவினான். அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. என்ன நிம்மதி! அகலிகை மீண்டும் கல்லானாள்!


 இந்திரா பார்த்தசாரதி:


குறு நாவல்கள் - மூன்று
 சிறுகதைகள் - ஐந்து
கட்டுரைகள் - இரண்டு
நாடகங்கள் - ஐந்து (தமிழ்நாடு அரசு பரிசு -அவ்ரங்கசீப்)
நாவல் - பதினான்கு
     வேதபுரத்து வியாபாரிகள் - பாரதீய பரிஷா பரிஷத் பரிசு
     குருதிப்புனல் -சாகித்ய அகாடமி பரிசு
      இயேசுவின் தோழர்கள் - ரங்கம்மாள் நினைவுப் பரிசு
      சுதந்திர பூமி - தமிழ் நாடு அரசு பரிசு


சிந்திக்கும் எழுத்தாளர்களில் ஒருவர்.  உயிரோட்டமாக எழுத்து இருக்கும்.
மனித மனங்களில் எழும் வெளிப்படுத்த இயலாத எண்ணங்களை, உணர்வுகளை மிகத் துல்லியமாகக் காட்டுபவர். வித்தியாசமான பார்வை கொண்டு இவர் எழுத்து இருக்கும்.

இவரது நோக்கில்:

காலத்தின் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கும்போது தான் வரலாற்றுப் பெரியார்கள், மனிதத் தன்மையோடு சம்பந்தப்படாமல் புகைப்படங்களாய்,
நிழல் சித்திரங்களாய், தெய்வச் சிலைகளாய் காட்சி தருகிறார்கள். அவர் காலத்தில் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் இப்பெரியார்களின் மன பலங்களும், பலவீனங்களும் புரிந்திருக்கும்.

ஏற்படுகின்ற ஏமாற்றத்தினால்மனம்ஒடிந்து செயலழிவது ஏமாற்றத்துக்கு
வெற்றி. மரணம் என்ற சத்தியத்தை நாம் சந்தித்தாக வேண்டுமென்ற
 நிர்பந்தத்தின் காரணமாகத்  தான் காலதேவனை நாம் உதாசீனம்செய்கிறோம். கவிஞர்கள் 'காலா என் காலருகே வா', 'நமனை அஞ்சோம்'என்றெல்லாம் பாடக் காரணமென்ன? எப்படியும் சாவது நிச்சயம்.இதற்காகப் பயந்து தினம் செத்துக் கொண்டிருக்க வேண்டுமா?


திருமதி சிமோன்