பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 23 novembre 2011

இன்றைய அறிமுகம் - ரோசா பார்க்ஸ்

அதிகமாக கேள்விப்படாத பெயர்!  ஆனால் பெண்ணினம் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய மனோதிடமும், உண்மை, நீதியின்பால் தாகமும் கொண்டவர்.

ரோசா லூயிஸ் மெக்காலே
1913  ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் தேதி பிறந்தார்.  மத்தியத்தரக் குடும்பம்.  திருமணத்திற்குப் பின் ரோசா பார்க்ஸ் ஆன அவர் 1955 இல் கைதானபோதுதான் உலக கவனத்தைக் கவர்ந்தார்.

பெண்ணுக்கும், கரு நிறத்திற்கும் மதிப்பில்லாதக் காலம்!  தென்னாப்பிரிக்க ரயிலில் காந்திக்கு ஏற்பட்ட அதே அனுபவம்!  அமெரிக்க அலபமா நகரில் பேருந்து ஒன்றில் பணியாற்றச் சென்ற ரோசாவை ஒரு வெள்ளைக்காரர் எழச் சொன்னபோது, மறுத்து, 'காசு கொடுத்து பயணச் சீட்டு வாங்கியுள்ளேன்' என வாதாடினார்.  உடனே அந்த வெள்ளைக்காரர் போலீசிடம் புகார் கொடுக்க கைது செய்யப்பட்டார்! கோர்ட்டில் ரோசா மீது குற்றம் சுமத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.


இச்செய்தி கருப்பர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்த,  வீரம் மிகுந்த ஓர் இளைஞன் தலைமை ஏற்க, நீதி கிடைக்கும் வரை மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை, பணிகளுக்கும் செல்வதில்லையென அவர்கள் முடிவு செய்தார்கள்.  பின் நாளில் கறுப்பினத் தலைவரான மார்டின் லூதர் கிங் தான் அந்த வீர இளைஞன்! அந்தப் புறக்கணிப்புப் போராட்டம்
381  நாட்கள் நடந்தன!

இடையே ரோசா தன் வழக்கை மிரட்டல்களுக்கும்,  தாக்குதல் முயற்சிகளுக்கும் நடுவே சுப்ரீம் கோர்ட் வரை கொண்டு சென்றார்!
1956  நவம்பர் பதிமூன்றாம் தேதி 'ரோசாவுக்கு இழைக்கப்பட்டது அநீதிதான்' என்ற தீர்ப்பு வழங்கப்படும்வரை பஸ் போராட்டம் தொடர்ந்தது.

ரோசா பொறுமையாகத் தொடர்ந்து போராடியதன் விளைவாக, சிவில் உரிமைச் சட்டங்கள் இயற்றப்பட்டன.  இன்றும் அவர் "சிவில் உரிமைகளின் தாய்" என அழைக்கப்படுகிறார்!

2005  அக்டோபர் இருபத்தி நான்காம் தேதி ரோசா  இறந்தபோது கருப்பு இனத்தவர் ஒருமிக்கக் கூறியது:

"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது".  ஒரு சாதாரணப் பெண் நினைத்தால், சரித்திரத்தையே மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறார் ரோசா பார்க்ஸ்!


திருமதி சிமோன்