பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 23 novembre 2011

பொது அறிவைப் புதுப்பிக்கும் தகவல்கள்

மருத்துவம்:

மூன்றாம் மாதக் கருவில் ஆண்மைக்குரிய 'testostiraan'  என்ற ஹோர்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இனப்பெருக்க உறுப்பை வளர வைப்பது இது.  ஒரு கரு xy குரோமோசோமும் பெற்று, இதுவும் சுரந்து ஆனால் சரியாக வேலை செய்யாமல் போனால் அது பெண்ணாய்ப்  பிறக்கும். கருப்பை இருக்காது. இது ஒரு வகை ஊனம். இவர்கள் அரவாணிகள் அல்ல. அரவாணிகள் ஆணாகப் பிறந்து தன்னைப் பெண்ணாக உணர்ந்து அல்லது பெண்ணாகப் பிறந்து ஆணாகத் தன்னை உணர்ந்து மாறுகிறவர்கள். ஆணின் உயிர் அணு 'xy'  பெண்ணின் உயிரணு 'xx'


பெரும் சத்தம் மனோரீதியாக பிரச்சனை ஏற்படுத்தக்கூடியது. வயிற்றுப்புண், அஜீரணம், உயர் ரத்த அழுத்தம் மட்டுமின்றி கண் பார்வை கூட பாதிக்கப்படலாம். 'பாவை' (pupil) குறுகச் செய்யும். வண்ணங்களை பிரித்தறிவதில் சிரமம், மாலைக்கண் நோய் ஏற்படலாம். உச்சக் கட்டமாக தற்கொலை, கொலை வெறி ஏற்படலாம். கருவைக்கூட சத்தம் பாதிக்கும்.


சமையல்:

அரிசி மங்கலாக இருந்தால் நீருடன் சிறிது மோர் கலந்து உலை வைத்தால் சோறு வெள்ளையாக இருக்கும்.

செம்பில் ரசம் வைத்தால் அதன் வாய் குறுகலாக உள்ளாதால் கொதிக்கிறபோது அதன் மணம், சுவை அப்படியே தங்கி நிற்கும்.


அறிவதில் அவசரத் தேவை:

கணணி திரை பார்வையின் கீழ்க் கோணத்தில் இருப்பது நல்லது.

வேலை இன்றி உட்கார்ந்து இருப்பதில் ஐந்து வருட ஆயுள் குறைகிறது.     

கியு வரிசையில் நிற்பதன் மூலம் ஆயுளில் இரண்டு வருடங்களை வீணடிக்கிறோம்    

ஆன்மிகம்:

பால்-நீர் போல் உலக பந்தத்தில் இணைந்து கலக்கிறோம். ஆன்மிக அனுபவங்களுக்குப்பிறகுவெண்ணெய்போல் அதிலிருந்து தனிப்படுகிறோம்.

குளம் என்பது உலகம். நீராடுதல் வாழ்க்கை. ஆடை அஞ்ஞான மறைப்பு. கோபியர் ஜீவாத்மா. கரை ஏறுதல் என்பது உலக பந்தத்தை விடுதல். வீடு என்பது மோட்சம்.  மறைப்புக்களை நீக்கி, ஞானம் வழங்கி, கரையேற வழி செய்கிறான் கண்ணன். ஆண்டவன் ஒருவனே அனைத்து ஜீவாத்மாக்களையும் தன்னோடு இணைக்கும் பரமாத்மா!


அறிஞர் கருத்துகள்:

நம் தேசத்தில் தாயின் கருவறை கூட பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. - அப்துல் கலாம்

நாம் ஒருவரிடம் காட்டும் அன்பும், காதலும் ஆழமானதாகவோ, மகத்தானதாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! ஆனால்
தொடர்ந்து சோர்வில்லாமல் அதைச் செய்வதில்தான் அதன் முழுமையும் வெற்றியும் அடங்கி இருக்கிறது. - அன்னை தெரேசா.


சரித்திரம்:

பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டையத் தேசப்படங்களில் 'மட்ரா' எனக் காணப்படுவதும், ஆங்கிலத்தில் 'மதுரா' எனச் சொல்லப்படுவதும், கிரேக்கரால் 'மெதோரா' எனக் குறிப்பிடப்படுவதும் இத்தமிழ் மதுரையே!

உ.வே.சா.வின் தமிழ்ப் பணியை ராமநாதபுரம் சேதுபதி மன்னர் வியந்து ஒரு கிராமத்தையே நன்கொடையாக அளிக்க முன் வந்தார். அதைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும்; தமிழ்ப்பணி தடைப்படும் என்று அதைப் பெற மறுத்து விட்டார் உ.வே.சா.

உடல் நலம்:

சிறு குழந்தைகளுக்கு 'கற்பதில் குறைபாடு' என்ற பிரச்சனை ஏற்படுவதுண்டு. எழுத்துக்களை மாற்றி வாசிப்பது, எண்களை  மாற்றிச் சொல்வது போன்ற தடுமாற்றம்.

டிஸ்லெக்ஸியா - எழுதுவது, வாசிப்பதிலுள்ள குறைபாடு.
டிஸ்கால்குலியா -  எண்களை எழுதுவதில் , படிப்பதில் உள்ள குறை.
disgrafia - எழுதுவதில் மட்டும் உள்ள பிரச்சனை.
disprakcia - திட்டமிடுவதில் ஏற்படும் சிக்கல். இது உள்ள குழந்தை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிலையாக இருக்க மாட்டார்கள்.

செல்போனில் பேசுவது போலப் பொது இடங்களில் பெண்கள் பாவனை செய்வது, தனக்குத் தானே புதுச் சூழலில் துணிச்சல்  ஏற்படுத்திக் கொள்வதற்கும், பார்க்கிறவர்களுக்கு "நான் தனியாக இல்லை" என்று அறிவிக்கவுமான தன்னிச்சைச் செயலாக வளர்ந்து வருவதாக ஒரு மனோதத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.


கவிதை சொல்லும் உண்மைகள்:

என்னை - இடிக்கத்தான் - வருகிறார்கள்!
யாரும் - கட்டுவதற்கு - வரவில்லை!   (முதிர் கன்னி-பாபர் மசூதி)

அனாதைக் குழந்தைகள் - கடவுளின் குழந்தைகள் - என்றால் -
கடவுளுக்கே செய்ய வேண்டும் - குடும்பக் கட்டுப்பாடு!

மகா பாரதம் - இதிகாசமானது. பகவத் கீதை - வேதமானது.
கண்ணன், அர்ச்சுனன் - கடவுளானார்கள்.
வெட்டிக்கொண்டும், குத்திக்கொண்டும் செத்துப்போன
சிப்பாய்கள் என்ன ஆனார்கள்?


உலுக்கும் உண்மைகள்:

குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் உலக அளவில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.

இந்தியாவில் நான்கு வருடத்திற்கு முந்தைய கணக்குப்படி
32 ,௦௦௦ கொலைகளும், 22 ,௦௦௦ கொலை முயற்சிகளும் நடந்துள்ளன. ஆனால் ஆறு சதவிகித குற்றவாளிகளே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்!
உலக முழுவதும் அறுநூறு கோடி கனரக ஆயுதங்கள் உள்ளன.  அதனால் 12  பேரில் ஒருவரிடம் துப்பாக்கி இருக்க, நிமிடத்திற்கு ஒருவர் வீதம் கொல்லப்படுகிறார்.


தொகுப்பு : திருமதி சிமோன்