பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 août 2011

உணவும் சுவையும்

    தற்போதுள்ள   குடும்பச்  சூழலில் கணவனும் 
மனைவியும் வேலை செய்ய வெளியே சென்று விடுவதால்
சுலபமான முறையில் விரைவில் சமைக்கக்கூடிய உணவு 
வகைகள் அல்லது முறைகள் தேவைப்படுகின்றன.அதை
உத்தேசித்து சில எளிய வழிகள் கடைபிடிப்பதன் மூலம்
உடலுக்குத் தேவையான சக்திகளை இழக்கும் அபாயம்
உள்ளது.

   இதைத் தவிர்க்க,  முதலில் சுவைகளின் பயன்களை
அறிவது நல்லது:

காரம்: உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்ச்சிகளை
             குறைக்க-கூட்ட பயன்படுவது. உதா:கோபம்,பயம்,
             ஆசை போன்றவை.
கசப்பு: உடலின் உதவாத கிருமிகளை அழிப்பது. சக்தியை 
             மிகுதியாக்குவது.
இனிப்பு: உடல் தசையை அதிகமாக வளர்ப்பது.
புளிப்பு: இரத்தக் குழாய்களின் அழுக்கை நீக்குவது.
துவர்ப்பு: உடலிலிருந்து ரத்தம் வெளியேறும் போது,
                 உறையச் செய்து, ரத்தம்  வீணாகாமல் காக்கிறது.
உப்பு: நினைவாற்றலை அளிக்கக் கூடியது.

மேற்கூறியவற்றிலிருந்து, ஒரே வகை உணவு உடல்  நிலை
பாதிக்கப்படக் காரணம் ஆகலாம் எனப் புரியும். உதாரணமாக
இனிப்பை மட்டுமே உண்பவர்கள் பருமனாக, ஆனால்
சக்தி அற்றவர்களாக, மந்தமானவர்களாக, எல்லா வியாதி-
களுக்கும் இடம் அளிக்ககூடியவர்களாக இருப்பதில் வியப்பு 
ஏதுமில்லை. 

அதே போல அதிக காரம் குடலில் புண்ணை உண்டாக்கியும்,
உப்பு அந்த ரணத்தை அதிகப் படுத்தியும் கேடு விளைவிக்கும்.
அதிகப்படியான உப்பை வெளி ஏற்ற இயலாது சிறுநீரகம் 
கோளாறு செய்யும். புளிப்புச் சுவையும் (முக்கியமாக "புளி")
ஜீரண உறுப்புகளில்  அரிப்பை ஏற்படுத்தும்.