பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 juin 2011

தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர்

சிவாஜி கணேசன் : 1960 எகிப்து தலைநகரான கைரோவில் ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் வெளியான முதல் டெக்னிக் கலர் படம்,
வீரபாண்டிய கட்டபொம்மன். இதில் சிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றார்.(இந்திய அரசு பிராந்திய சான்றிதழ் அளித்தது) சிவாஜியும் இசை
அமைப்பாளர் ஜி.ராமநாதனும் 'வெள்ளி பருந்து' பரிசு பெற்றனர்.

பிரான்சு 'செவாலியர்' விருது கொடுத்து சிவாஜியை கௌரவித்தது. மத்திய அரசு 45 வருட சாதனைக்காக 'தாதா சாகேப் பால்கே' விருதளித்தது.
தங்கத் தாமரையுடன் ஒரு லட்சம் ரொக்கப்பரிசு ஜனாதிபதி வழங்கினார்.
இதல்லாமல் மத்திய அரசு 'பத்ம ஸ்ரீ', 'பத்ம பூஷன்' பட்டங்களும் அளித்தது.

எம்.ஜி.ஆர்.: மத்திய அரசின் 'பாரத்', 'பாரத ரத்னா' விருதுகளைப் பெற்றார்.

கமல் ஹாசன்: இந்திய அரசின் 'பத்ம ஸ்ரீ' விருது பெற்றவர்.முதல் படத்திற்கே தேசிய விருது. பிலிம் பேர் விருது 18 முறை. 'மையம்' என்ற இலக்கிய பத்திரிகை சிறிது காலம் நடத்தினார்.நடன இயக்குனராகப்
பணி புரிந்தார். 'சிவாலயா' என்ற நடனக்குழு நடத்தினார். தமிழ்,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி,பெங்காலி மொழிகளில் நடித்துள்ளார்.
தன் உடலைத் தானம் செய்துள்ளார். 'ஹே ராம்' பட இயக்குனர். ஆங்கிலம்,
பிரெஞ்சு உட்பட எண் மொழி வித்தகர். கவிதை எழுதுவார். திரைக்கதை
பயிற்சிப் பட்டறை நடத்துகிறார்.

ரஹ்மான்: ஆஸ்கர் கமிட்டியின் 80 வருட சரித்திரத்தில் 2 ஆஸ்கர் ஒரே
நேரத்தில் வென்ற ஒரே இந்தியர்.உலக சுகாதார கழக டி.பி. நோய் எதிர்ப்பு
பிரசாரத்தின் உலக தூதுவர் பதவி அளிக்கப்பட்டது.'சேவ் தி சில்ட்ரன்'
அமைப்பில் இணைந்து பணி ஆற்றுகிறார்.இந்தோனேசியா சுனாமி நிவாரண நிதி, தி பாணியன், ப்ரீ ஹக்ஸ் காம்பைன் போன்றவற்றுக்கு
நிதி திரட்டித் தருகிறார். ஏழைக் குழந்தைகளின் இலவசக் கல்விக்கு
'ரஹ்மான் பௌண்டேஷன்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன்:பல்லவி-அனுபல்லவி-சரணம் என்றிருந்த தமிழ்
திரைப் பாடல்களை பல்லவி-சரணம்-சரணம் என மாற்றியவர்.

விவேக் : 'பத்ம ஸ்ரீ' வாங்கியவர்.

நாகி ரெட்டி: 'பல்கே' விருது பெற்றார்.

மனோரமா: ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னசில் இடம் பெற்றார்.

பிரேம் நசீர்: நானூறு படங்களுக்கு மேல் கதா நாயகனாகவே நடித்து
கின்னசில் இடம் பெற்றவர்.

கண்ணதாசன்:தமிழ் நாடு அரசவைக் கவிஞர். திரைப்படங்களுக்கு ஐந்து
ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் எழுதி இன்று வரை மக்கள் மனதில்
நிலைத்திருப்பவர்.பெங்களூரின் வேத பண்டிதர்களை வரவழைத்து சூரிய
பகவான் பற்றிய மந்திரங்களையும், அர்த்தங்களையும் தெரிந்துகொண்டு
'கர்ணன்' படப் பாடல்களை எழுதினார்.

வட இந்தியர் எனினும்  'இந்திய திரைப்பட உலகின் தந்தை' எனப் பெயர்
பெற்ற இயக்குனர் வி. சாந்தாராம், சர்வ தேச தரத்திற்கு படங்களை தயாரித்து
உலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய வங்க இயக்குனர் சத்தியஜித் ரே
இருவரையும் நினைவு கூறுதல் அவசியம். ஏனெனில் பொதுவாகவே இந்தியப்
படங்கள் இந்த இருவரிடம் இருந்தும்   பெற்ற நன்மைகள் ஏராளம்.

'பட்டணத்தில் பூதம்' என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய அருமையான
பாடல் ஒன்று:

உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுத்து
தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் மகற்கென்றும்
பண்பு தெரியா மிருகம் பிறந்தாலும்
பசித்த முகம் பார்த்துப் பதறும் நிலை பார்த்து
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல்
துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து
அள்ளி இடும்போதெல்லாம் அன்பையே சேர்த்தெடுத்து
சொல்லாமல் சொல்லியிடும் தேவதையின் கோயிலது
பால்தரும் கருணை அது பழம் தரும் சோலை அது
கொடுக்கின்ற கோவில் அது அணைக்கின்ற தெய்வம் அது!