பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 mai 2011

சிந்தனைக்கு


மனதை அடக்கி ஆள வேண்டுமென்று அடிக்கடி சொல்லக் கேட்கிறோம்.
முதலில் மனம் செயல்படும் விதத்தை அறிவது இதற்கு அவசியமாகிறது.

வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என மூன்று பிரிவுகளாக செயல்படும்
மனதை ஒருமுகப்படுத்துவது எளிதானதாக இல்லாமற் போவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

வெளிமன செயல்பாடு                                          உள்மன செயல்பாடு

பார்த்தல்,பேசுதல்,செயல்படுதல்.      எல்லாவற்றையும் கவனித்து சில
                                                                  வற்றை மட்டும் கிரகித்தல்.

ஒன்றை உடனே அடைய                   நிதானப்படுத்துவது.
விரும்புவது.

புரியாது, அறியாது கவலைப்படல்.    கவலை நீங்க தைரியம் அளித்தல்.

மீண்டும் தவறுவது, மறைப்பது.          உண்மையைக் காட்டிக்கொடுப்பது.

எல்லாவற்றையும் நம்புவது.                சிந்திப்பது.

பழையதை மறப்பது.                             தேவைப்படும் நேரத்தில் பழையதை
                                                                      வெளிக்கொணர்வது.

அனைத்தையும் உள்மனத்திடம்           உள்மனக் குறைகளை ஏற்று பதில் கூறல்.
ஒப்புவிப்பது.

சிந்திக்கும் திறன் மிகக்குறைவு.           சிந்தித்தே பதில் அளிப்பது.

     வெளி மன செயல்பாடுகள் தன்னிச்சையாக எப்படி உள்மனதிற்கு அனுப்பப்
படுகிறதோ அதுபோல உள்மனதால் முடியாதச் செயல்கள் ஆழ்மனதிற்கு
சென்றுவிடுகின்றன. சிந்தனையின் கட்டுப்பாட்டில் அவை அமைதியாக
இருக்கும். இன்பமோ , துன்பமோ சுமை அதிகரிக்கும்போது அவை எது தடுத்
தாலும் நிற்காது, உள், வெளி மனங்களை புறத்தேத் தள்ளி, செயல்பாட்டில்
இறங்கிவிடும்.

கருத்து: துரை பா. வேலவன்