பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 12 mars 2011

எண்ணப்பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். "மகளிர் தின" வாழ்த்துக்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இந்த மகிழ்ச்சி உள்ளார்த்தமானதா எனில்  உடன் இசைய இயலவில்லை. வெறும் ஒரு தினத்தை ஒதுக்கிவிடுவதால் அந்த நாள் நினைவுறும் மாற்றம் வந்துவிடப்போவதில்லை. அந்த அளவுக்கேனும் மதித்திருக்கிறார்கள் என மகிழ்வுறலாம். அவ்வளவே! ஊன்றிப்பார்த்தால் நலிவுற்றவர்களுக்கே இம்மாதிரி நாட்கள் ஒதுக்கப்பட்டி ருப்பதைக் காணலாம்."குழந்தைகள்","தொழிலாளர்கள்" ஏனையோரும் இந்த ரகமே!

சமுதாயத்தில் இன்னும் இவர்கள்  நிலை உயர்த்தப்பட வேண்டியவர்கள்   
 என்பதையே இது காட்டுகிறது. அதாவது சமூக மாற்றம் தேவை! அது எப்படிக்கிடைக்கும் என்பதை ஆலோசிப்பதை விடுத்து, ஒரு நாளை ஒதுக்கிவிட்டதோடு வாளாவிருத்தல் சுயநலத்திற்கு ஒப்பானதே. பொதுவாக  பெண்களை மதிக்க வேண்டும்; குழந்தைகளிடம் அன்பு காட்ட வேண்டும்; ஏழைகளிடம் பரிவு கொள்ள வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்வதில் பயனில்லை.

இந்த மாற்றம் வர, மனித மனங்கள் மாற வேண்டும். அதற்கு விரிந்து பரந்தநோக்கும், நேயமும் வேண்டும். தான், தனது என்ற குறுகிய வட்டத்தை  
உடைத்தெறிய வேண்டும். இந்நிலை வர கீதையில் காணப்படும் கீழ்கண்ட வரிகள் நிச்சயம் உதவும்:

"எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு? எதை நீ படைத்தாய் அது வீணாவதற்கு? எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடைய தாகிறது".

அகன்ற பார்வையும், அணைக்கும் கரங்களும், அனைவரையும் சமமாகக் 
 காணும்
 விவேகமும்  வந்துவிட்டால்   வாழ்வில் சமத்துவமும் தன்னால் பிறக்கும்.

துன்பத்தில் உழல்பவர்க்கோ, மனவலிமை கிடைக்க வாழ்வை வேறொரு
நோக்கில் காணும் பக்குவத்தை வரும் வரிகள் தரலாம்:

"நான் வலிமை கேட்டேன். கடவுள் வலிமை பெற துன்பத்தைக் கொடுத்தார்.
நான் ஞானத்தைக் கேட்டேன். அவர் அதைப் பெற சிக்கலைக் கொடுத்தார்.
நான் செல்வத்தைக் கேட்டேன். அவர் உழைக்க அறிவும் ஆற்றலும் தந்தார்.
நான் துணிவைக் கேட்டேன். அவர் கடந்து வர அபாயங்களைக்  கொடுத்தார்.
நான் அன்பைக் கேட்டேன்.  அவர் அன்பு காட்ட வாய்ப்பளித்தார்.
நான் கேட்டது எல்லாம் எனக்குக்  கிடைத்து விட்டன".

திருமதி சைமன்