பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 décembre 2010

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

இப்போதுதான் வருடம் பிறந்தது போல இருந்தது. அதற்குள் வருடக் கடைசிக்கு வந்துவிட்டோம். இதனால்தான் காலத்தைச் சுழலும் சக்கரம் என்கிறார்கள். யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வருடத்தின் இறுதியில் இருப்பவர்கள் எப்போதும் அந்த ஆண்டின் வரவு செலவு, நல்லது கெட்டது இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது வழக்கம். நாமும் வாழ்க்கையின் இந்த ஓராண்டுக் கணக்கை, நிகழ்வுகளை, வெற்றிகளை, தோல்விகளை, துன்பங்களை, ஏக்கங்களை அலசிப் பார்ப்போம். அது   லாபமாகவும் இருக்கலாம், நட்டமாகவும் இருக்கலாம். சுக துக்கம் சுழல் சக்கரம் என்பார்கள். மேடு பள்ளங்களைச் சரி செய்துகொண்டு அடுத்த ஆண்டு ஓட்டத்துக்கு நம்மைத் தயார் செய்து கொள்வோம். இறைச் சித்தம் அல்லது பலரும் சொல்லும் விதி என்ற ஒன்று இருந்தாலும் வாழும் நாட்களில் நம் செயல்பாடுகளைத் திறம்படச் செயல்படுத்த நமக்குத் தேவை உடல், உள்ள நலன்கள். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.  இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்படுமாயின் நாம் முடங்கிப் போய்விடுகிறோம். நமது உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் மருத்துவத் தொடர்புடைய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

லூசியா லெபோ